ஒடிசா மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்க உள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக மத்திய அரசின் தேர்வு முகமை நடத்தும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை ஒடிசா மாநில அரசு மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் துணைப் பயிற்சியாக ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கல்வி அறைகளுக்கான ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக தொகை செலுத்தி பயிலும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு மாற்றாக அரசே இந்த பயிற்சியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.














