நம்மவர் படிப்பகங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த உள்ளது.
மக்கள் நீதி மய்யம், கோடை விடுமுறையை முன்னிட்டு நம்மவர் படிப்பகங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் இயங்கும் இந்த படிப்பகங்கள், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன.
அமெரிக்காவின் லீப் (LEAP) அமைப்புடன் இணைந்து, ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆறு வாரங்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பயிற்சி அளிக்க உள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். கல்வியை அனைவருக்கும் வழங்குவது மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய இலக்காகும்.