பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்டி, சேலைகள் டெண்டர் குறித்தும், எவ்வளவு கொள்முதல் செய்யவேண்டும் எனவும், அதன் தரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கு ஏதுவாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.