உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச 'வை-பை' சேவை

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச ‘வை-பை’ சேவை தொடங்க உள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வை-பை சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். இதன்படி உச்சநீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிமன்ற அறைகள் வை-பை வசதி கொண்டதாக மாறிவிட்டதாகவும், அனைத்து நீதிமன்ற அறைகளிலும் சட்டப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் இருக்காது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய தலைமை நீதிபதி […]

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச ‘வை-பை’ சேவை தொடங்க உள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வை-பை சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். இதன்படி உச்சநீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிமன்ற அறைகள் வை-பை வசதி கொண்டதாக மாறிவிட்டதாகவும், அனைத்து நீதிமன்ற அறைகளிலும் சட்டப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் இருக்காது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், " இனி அனைத்து நீதிமன்ற அறைகளும் வை-பை வசதியுடன் இருக்கும். புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் இல்லை. புத்தகங்கள் மற்றும் காகிதங்களை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று சொல்ல முடியாது" என்று அவர் கூறினார். இந்த சேவையை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மனுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu