ஹவுதிகள் தாக்குதல் காரணமாக சூயஸ் போக்குவரத்து 45% சரிவு

January 27, 2024

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 45 சதவீதம் குறைந்துள்ளது என்று ஐநாவின் வர்த்தக பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்மன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 45 சதவீதம் குறைந்துள்ளது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருள்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது. உலக […]

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 45 சதவீதம் குறைந்துள்ளது என்று ஐநாவின் வர்த்தக பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்மன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 45 சதவீதம் குறைந்துள்ளது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருள்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது. உலக அளவில் விலைவாசி உயரும் அபாயம் உள்ளது என்று அவர் கூறினார்.

ஹவுதிகள் தாக்குதல் காரணமாக கப்பல் நிறுவனங்கள் செங்கடலில் இருந்து கப்பல்களை திருப்பிவிட்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தானியங்கள் மற்றும் எண்ணெய்களின் வணிகம், பனாமா கால்வாய் உட்பட மூன்று முக்கிய உலகளாவிய வர்த்தக வழிகள் இப்போது தடைபட்டுள்ளன. சூயஸ் கால்வாய் உலக வர்த்தகத்தில் 12-15% கையாளுகிறது குறிப்பிடத்தக்கது. கப்பல்கள் நீண்ட பாதைகளைத் தேர்ந்தெடுத்து, மாற்றுப்பாதைகளை ஈடுகட்ட வேகமாக பயணிக்கின்றன. இதனால் உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu