டெல்லியில் சரக்கு ரயிலில் 10 க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் ஜாகிர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் 10 க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. சில ரயில்கள் வேறு திசையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.