கிருஷ்ணகிரியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

April 21, 2023

கிருஷ்ணகிரியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில்வே நிலையம் அருகே, சேலத்தில் இருந்து ஒசூர் வழியாக பெங்களூருக்கு உரங்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டது. ரயில் என்ஜினிலிருந்து 3 முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் சேலம், தர்மபுரி, ஒசூர் வழியாக பெங்களூருக்கு செல்லும் ரயில்களும், பெங்களூருவில் இருந்து சேலம், தர்மபுரி, ஒசூர் வழியாக பிற ஊர்களுக்கு […]

கிருஷ்ணகிரியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில்வே நிலையம் அருகே, சேலத்தில் இருந்து ஒசூர் வழியாக பெங்களூருக்கு உரங்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டது. ரயில் என்ஜினிலிருந்து 3 முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் சேலம், தர்மபுரி, ஒசூர் வழியாக பெங்களூருக்கு செல்லும் ரயில்களும், பெங்களூருவில் இருந்து சேலம், தர்மபுரி, ஒசூர் வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களும் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. மீட்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu