பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், மெத்வதெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
பாரிஸில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி சுற்றும் முடிந்து முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் பிரான்ஸ் வீரருடன் மோதினார். இதில் 6-4,7-6(7-3),6-4 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வதெவ் ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரண்டு சுற்றுகளை 6-3,6-4 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை டொமினிக் வென்றார். இதனால் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்று முன்னேறியுள்ளார்