கடந்த 3 அமர்வுகளாக கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டு எழுந்துள்ளது. இன்றைய தினம், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 351.49 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 66707.2 புள்ளிகளிலும், நிஃப்டி 19778.3 புள்ளிகளிலும் பதிவாகியுள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எல் அண்ட் டி நிறுவனம் 3% வரை உயர்ந்துள்ளது. இது தவிர, ரிலையன்ஸ், ஐடிசி, பிரிட்டானியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை உயர்ந்துள்ளன. அதே வேளையில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா, டெக் மஹிந்திரா, எச்டிஎப்சி வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.