ஈரானின் செஹ்ராபாத்தில் அமைந்துள்ள உப்பு சுரங்கம், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பழமையான உப்பு சுரங்கங்களில் ஒன்றாகும். இது வெறும் உப்பு சுரங்கம் மட்டுமல்ல; காலத்தை உறக்கத்தில் வைத்திருக்கும் ஒரு அதிசயம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்த சுரங்கம் பல உடல்களை பாதுகாத்து வைத்துள்ளது. உப்பு, ஒரு சிறந்த பாதுகாப்புப் பொருள். இது ஈரப்பதத்தை உறிஞ்சி கொண்டு, பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. செஹ்ராபாத் சுரங்கத்தின் உலர்ந்த மற்றும் ஆக்ஸிஜன் குறைந்த சூழல், உடல்களை இயற்கையாகவே மம்மி செய்து, அவற்றை கிட்டத்தட்ட அப்படியே பாதுகாத்துள்ளது.
கடந்த 1993 இல் தொடங்கி, இந்த சுரங்கத்தில் பல மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சில கிமு 9550 க்கு முந்தையவை. நீண்ட வெள்ளை தாடி, தங்க காதணி மற்றும் இரும்பு கத்திகளுடன் காணப்பட்ட முதல் சால்ட்மேன், கிபி 300 இல் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகள், பண்டைய கால மனிதர்களின் வாழ்க்கை மற்றும் மரணம் பற்றி நமக்கு பல புதிய தகவல்களை வழங்கியுள்ளன.