மாநிலத்தில் உள்ள 75 ரயில் நிலையங்களையும் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.
மாநிலத்தில் உள்ள 75 ரயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 35,580 கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 6080 கோடியை இந்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது.
இது தமிழ் மக்கள் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள அன்பையும், அக்கறையும் வெளிப்படுத்துகிறது என தெரிவித்தார். மேலும் நெல்லை - மதுரை - சென்னை மற்றும் சென்னை- விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் சேவைகளையும் வழங்கியதற்காக கவர்னர் ரவி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.