ட்ரோனில் அவசரகால மருந்து பொருட்கள் - கருடா ஏரோ ஸ்பேஸ் மற்றும் நாராயணா ஹெல்த் ஒப்பந்தம்

February 20, 2023

பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயணா ஹெல்த் நிறுவனத்துடனான புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சஞ்சீவினி ட்ரோன் மூலம், மருத்துவப் பொருட்களை கொண்டு செல்ல இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவசரகால மருத்துவப் பொருட்களை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சவாலான சூழ்நிலைகளில் கொண்டு செல்வதற்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் மருந்துகள் எடுத்துச் செல்லப்படுவதால், இது மருத்துவத் துறைக்கு […]

பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயணா ஹெல்த் நிறுவனத்துடனான புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சஞ்சீவினி ட்ரோன் மூலம், மருத்துவப் பொருட்களை கொண்டு செல்ல இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அவசரகால மருத்துவப் பொருட்களை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சவாலான சூழ்நிலைகளில் கொண்டு செல்வதற்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் மருந்துகள் எடுத்துச் செல்லப்படுவதால், இது மருத்துவத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து இரு நிறுவனங்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. மேலும், ‘இந்திய மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை இது ஏற்படுத்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன.

முதற்கட்டமாக, நாராயணா ஹெல்த் சிட்டி மற்றும் எச் எஸ் ஆர் லேஅவுட் ஆகியவற்றிலிருந்து பயோ மெடிக்கல் மாதிரிகளை கொண்டு செல்ல ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் எனவும், அடுத்த ஒரு வருடத்திற்குள், நாராயணா குழுமத்தை சார்ந்த 21 மருத்துவமனைகள் இந்த சேவையைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu