தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றால் ரூபாய் 500க்கு சமையல் கேஸ் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
சமீபத்தில் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூபாய் 500க்கு சமையல் கேஸ் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி வருகிற 28ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் பெண்கள் பெயரில் உள்ள கேஸ் இணைப்புகளுக்கு மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தில் ரூபாய் 500 மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 1.20 கோடி கேஸ் இணைப்புகள் உள்ளன. இதில் பெண்கள் பேரில் உள்ள இணைப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இதனால் ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகளை பெண்கள் பெயருக்கு மாற்ற மக்கள் நீண்ட நேரம் வரிசையில் கேஸ் ஏஜென்சி முன்னிலையில் காத்திருக்கின்றனர்.