ராஜஸ்தான் மாநிலத்தில் புதியதாக பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறது. அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூபாய் 450 க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது அம்மாநிலத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகார அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் சேர்ந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார்.