2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. அதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், அதானி குழுமத்தின் சேர்மன் கௌதம் அதானி 60.2 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக, ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 4 ட்ரில்லியன் ரூபாய்க்கு சமமாகும். அத்துடன், ஜனவரி 27ஆம் தேதி, 20.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை கௌதம் அதானி இழந்தார். இது, ஒரு நாளில் பதிவான உச்சபட்ச இழப்புத் தொகை என்பதாக, ப்ளூம்பர்க் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.