அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அண்மையில், அதானி குழும பங்குகள் உச்சத்தை எட்டிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமாக அதானி குழுமத்தை உருவாக்கும் எண்ணத்துடன் முதலீடுகள் செய்ய உள்ளதாக கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், பசுமை எரிசக்தி தொடர்பான விரிவான பதிவில் அவரது முதலீடு தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில், 7 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2040 ஆம் ஆண்டில், தேசத்தின் ஜீரோ கார்பன் துறைமுக நிறுவனமாக அதானி போர்ட்ஸ் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.