கடந்த 2023 ஜனவரி மாதத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதன் காரணமாக, அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தன. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு பெருமளவில் சரிந்தது. இந்த நிலையில், சரியாக ஓராண்டு கழித்து, கௌதம் அதானி மீண்டும் 100 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை எட்டி உள்ளார். மேலும், ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கு பிறகு, முதல் முறையாக அவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். பதினோராம் இடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தை எட்டியது. அதைவிட வெறும் 50 பில்லியன் டாலர்கள் குறைவாக தற்போதைய சொத்து மதிப்பு பதிவாகியுள்ளது. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து, தற்போது, கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.