காசா பகுதியில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த அக்டோபர் ஏழு முதல் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் ராணுவப்படை தொடர்ந்து காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காசாவில் மருத்துவமனைகள் முடங்கிப் போய் உள்ளது. இதனை உலக நாடுகளும் ஐநா சபையும் எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 8000 குழந்தைகள் மற்றும் 6200 பெண்களும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐநா சபையின் சிறப்பு கூட்டத்தில் உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு எதிராக அமெரிக்கா உட்பட 10 நாடுகள் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.