கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதில் 184 பேர் பலியாகியுள்ளனர்.
காசா பகுதியில் நடைபெற்ற போரில் இன்றுவரை சுமார் 45,000 பாலஸ்தீனியர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதோடு லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் பெற்றுள்ளனர். இந்த நிலைமையை கவனித்த உலக நாடுகள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிக்க வலியுறுத்துகின்றன. எனினும், ஹமாஸ் அமைப்பினை முற்றிலும் அழிக்காத வரை போர் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதில் 184 பேர் பலியாகியுள்ளனர்.