இஸ்ரேல் நான்கு பனைய கைதிகளை மீட்க தாக்குதல் நடத்தியதில் சுமார் 24 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.
காசாவின் மத்திய பகுதியில் உள்ள நூஜ்ரத் அகதிகள் முகாம் பகுதியில் நேற்று இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த பகுதியில் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த தாக்குதலின் முடிவில் நான்கு பனைய கைதிகளை இஸ்ரேல் படையினர் உயிருடன் மீட்டனர். நோவா அர்கமானி, அல்மோக், ஸ்லோமீ, ஆண்றே ஆகியோர் அந்த நான்கு இஸ்ரேலியர் ஆவர். பிற பனைய கைதிகள் சுரங்கப்பாதைக்குள் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்பது என்பது ஆபத்து மற்றும் சிக்கல் நிறைந்தது. இந்த தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சுமார் 700 பேர் காயமடைந்தனர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் எத்தனை பேர் பெண்கள், குழந்தைகள் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது பகல் நேரத்தில் நடந்த தாக்குதல் என்பதாலும் மக்கள் அதிகமாக வசித்த பகுதி என்பதாலும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேல் படையின் தாக்குதலால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீட்பு பணியின் போது இஸ்ரேல் படை மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதிலடி கொடுக்கப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.