மேலும் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே இன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி நான்காவது நாள் ஆகும். இன்று 50 பிணை கைதிகள் மற்றும் 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 17 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர். இஸ்ரேல் ராணுவம் 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது.
இப்போது கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை போர் துவங்குமா அல்லது ஒப்பந்தம் நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக அமெரிக்க பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மனிதாபிமான உதவிகளை காஸா மக்களுக்கு அனுப்ப முடியும் என்று அவர் நம்புகிறார். அதோடு பிணை கைதிகளும் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேலும் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மேலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளும் இஸ்ரேலை இதனையே வலியுறுத்தி வருகின்றனர். அதோடு நாள் ஒன்றுக்கு 200 வண்டிகளில் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து இரு மாதத்திற்கு அனுப்புவது அவசியம் என்று ஐநா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.