அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் நகை ஏற்றுமதி 15% சரிவு

November 21, 2022

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் நவரத்தின மற்றும் நகைகள் ஏற்றுமதி 14.64% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GJEPC வெளியிட்டுள்ள அறிக்கை படி, அக்டோபர் மாதத்தில், நகை ஏற்றுமதி மதிப்பு 25843.84 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த வருட அக்டோபர் மாதத்தில், 30274.64 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நகைகள் ஏற்றுமதியில் உயர்வு காணப்பட்டாலும், அக்டோபர் மாதத்தில் சரிவு உணரப்பட்டுள்ளது. இது வழக்கமான சந்தை போக்கு என்று கருதப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி […]

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் நவரத்தின மற்றும் நகைகள் ஏற்றுமதி 14.64% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GJEPC வெளியிட்டுள்ள அறிக்கை படி, அக்டோபர் மாதத்தில், நகை ஏற்றுமதி மதிப்பு 25843.84 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த வருட அக்டோபர் மாதத்தில், 30274.64 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நகைகள் ஏற்றுமதியில் உயர்வு காணப்பட்டாலும், அக்டோபர் மாதத்தில் சரிவு உணரப்பட்டுள்ளது. இது வழக்கமான சந்தை போக்கு என்று கருதப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி சமயம் என்பதால் ஏற்றுமதியில் சரிவு உணரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரு மாதங்கள், வெளிநாட்டினருக்கு பண்டிகை காலம் என்பதால் ஏற்றுமதி பெருமளவு உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில், 45.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், நகை ஏற்றுமதி இருக்கும் என்று நம்புவதாக GJEPC தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu