இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் எனும் பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் எனும் பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. இது நடைமுறைக்கு வரும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பா.ஜ.க., இன்று (ஜனவரி 27) இந்த சட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பொது சிவில் சட்டத்திற்கான வலைதளத்தை மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகள் முடிவடைந்த நிலையில், இச்சட்டம் இன்று அமலுக்கு வருவது முக்கியமாக கருதப்படுகிறது.