முழு நேர ஒப்பந்ததாரர்கள் பணி நீக்கம் - ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான முழு நேர ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டெட்ராய்ட் -ல் உள்ள பொறியியல் மையத்திலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், “ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5000 சம்பள ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக கூறினர்” - இவ்வாறு ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, உயர் பதவியில் உள்ள நூற்றுக்கணக்கானோரை, நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் […]

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான முழு நேர ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டெட்ராய்ட் -ல் உள்ள பொறியியல் மையத்திலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், “ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5000 சம்பள ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக கூறினர்” - இவ்வாறு ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, உயர் பதவியில் உள்ள நூற்றுக்கணக்கானோரை, நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில், இந்த பணி நீக்கம் மற்றும் வெளியேறுதல் மூலம், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் சேமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேரி பாரா, பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன நிறுவனங்களிலும் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu