தமிழகத்தை சேர்ந்த மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயார் செய்யப்படும் நாமக்கட்டி, தஞ்சாவூர் வீரமாங்குடி செடிபுட்டா சேலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு, புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், தமிழ்நாட்டின் 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. இதன் மூலம், அந்த பொருட்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.