ஜார்ஜியாவின் முன்னாள் அதிபருக்கு கூடுதல் 4½ ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் மிகைல் சாகாஷ்விலி மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. 2018 ஆம் ஆண்டு, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் அவர் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார், அதன் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அண்மையில் நடந்த பணமோசடி வழக்கில் அவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் சட்ட விரோதமாக எல்லை கடந்து உக்ரைன் சென்றிருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக, தற்போது நீதிமன்றம் அவருக்கு கூடுதல் 4½ ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இதன் மூலம், மிகைல் சாகாஷ்விலியின் சிறைத் தண்டனை மேலும் நீடிக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது.