ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ஒரு டன் எடையுள்ள வெடிகுண்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் உலகின் பெரும்பாலான நாடுகள் ஆக்ஸிஸ் மற்றும் அல்லீஸ் என இரு அணிகளாக பிரிந்து போரிட்டன. இந்த போர் இரண்டாம் உலகப் போர் என அழைக்கப்பட்டது. இதில் ஜெர்மனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் மீது 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வீசியது. அதில் பெரும்பகுதி ஜெர்மனியில் வெடிக்காமல் புதைந்தது. இன்றளவும் ஆங்காங்கே அவை கண்டுபிடிக்க பட்டு வருகின்றன.
இந்நிலையில் 1 டன் எடையுள்ள வெடிகுண்டு அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனை சுற்று சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் அனைத்து மக்களையும் வெளியேற்றி உள்ளனர். சுமார் 13000 பேர் மக்களை தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வெடிகுண்டு அப்புறப்படுத்தும் பணி காவல் துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.