ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டதால் 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1300 பேர் வெளியேறியுள்ளனர். பேடன் வுட்டன்பெர்க், பவேரியா போன்ற மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நெக்கர், புயன்ஸ், டொனோவ் போன்ற நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து அணைகள் உடைந்து வருகிறது. இதையடுத்து அங்கு 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு மக்களை இடமாற்றி வருகின்றனர்.