ஜொ்மனி, திறன்மிகு இந்திய பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000-ல் இருந்து 90,000-ஆக உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது என பிரதமா் நரேந்திர மோடி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஜொ்மனி இடையிலான 7-ஆவது உயா்நிலை பேச்சுவார்த்தை மற்றும் மற்ற நிகழ்வுகளுக்காக, ஜொ்மன் பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் வியாழக்கிழமை இந்தியாவுக்கு வந்தார். தில்லியில் நடைபெற்ற ஜொமனியின் 18-வது ஆசிய-பசிபிக் கருத்தரங்கில், மோடி கூறியதாவது, "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்கவும், ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக உருவாக்குவோம்’ முயற்சியில் இணையவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இதுவே சரியான நேரம்." இது
குறித்து ஜெர்மன் பிரதமா் கூறுகையில், "சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துகிறோம். ஆனால் திறன்மிகு பணியாளர்களை வரவேற்கிறோம்" என்றார்.