இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே விசா குறித்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனலீனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை புதுடில்லியில் அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் போர், ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் உட்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் இரு நாடுகளுக்கு இடையே மக்கள் பயணிப்பதை எளிமையாக்கும் வகையில் , 'விசா' முறைகளில் சலுகைகள் அளிக்கும் ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.