உலகில் டைனோசர்கள் தோன்றுவதற்கு கிட்டத்தட்ட 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ராட்சத உயிரினம் ஒன்று வாழ்ந்து வந்துள்ளது. சதுப்பு நில பகுதிகளில் வேட்டை குணம் கொண்ட இந்த உயிரினம் வாழ்ந்து வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது 2 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் நீளமான மண்டையோடு கொண்ட விலங்காக இருந்துள்ளது. புதை படிவ சான்றுகள் இதை உறுதி செய்கின்றன.
சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமீபியா பகுதி அண்டார்டிகா அருகே இருந்தது. அந்த செழிப்பான சூழலில் இந்த மிருகங்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நமீபியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மிருகத்தின் புதை படிவத்தை வைத்து, அதற்கு Gaiasia jennyae என்று பெயரிடப்பட்டுள்ளது. இரையை உறிஞ்சுவதற்காக பிரத்தியேகமான பற்களை இந்த விலங்கு கொண்டிருந்தது புதை படிவங்கள் மூலம் தெரிகிறது. மேலும், கோண்டுவானா பகுதியில் வசித்த 4 கால்கள் கொண்ட விலங்கின் பரிணாம வளர்ச்சி பற்றிய தகவல்கள் இதன் மூலம் கிடைக்கிறது.