‘நரகத்தின் வாசல்’ என்று அழைக்கப்படும் சைபீரியாவின் படகைக்கா பள்ளம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக வேகமாக விரிவடைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்த பள்ளம் மூன்று மடங்கு பெரியதாகி, தற்போது 200 ஏக்கர் அகலமும் 300 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது.பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெர்மாஃப்ரோஸ்ட் உருகுதல் இந்த பள்ளம் விரிவடைவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பள்ளம் ஆண்டுதோறும் 4,000 முதல் 5,000 டன் கரிம கார்பனை வெளியிடுகிறது. இது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரித்து, பருவநிலை மாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.