சர்வதேச நாணய நிதியத்தில் முக்கிய பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், தற்போது தன் கல்வி பணிக்குத் திரும்பும் முடிவை எடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஐ.எம்.எஃப்-இல் தலைமைப் பொருளாதார நிபுணராக சேர்ந்த கீதா கோபிநாத், பின்னர் துணை நிர்வாக இயக்குநராக உயர்ந்தார். தற்போது ஐ.எம்.எஃப்-இல் 7 ஆண்டுகள் சேவை செய்த பின், ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “என் கல்வி வேர்களுக்கு திரும்புகிறேன்” என தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பற்றி ஐ.எம்.எஃப். இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே, "அசாதாரண அறிவும், நேர்மையான தலைமைப் பண்பும் கொண்டவர்" என பாராட்டியிருந்தார்.