புதுடெல்லி, ஏப்ரல் 28, 2022:
இந்தியர்களுக்காக, மிகக் குறைந்த விலையில், பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்தியிருக்கிறது Gizmore நிறுவனம். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, GIZFIT 910 PRO என்ற ஸ்மார்ட் வாட்ச் மாடலை 2499 ரூபாய்க்கு விற்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 1.69 இன்ச் தொடுதிரையுடன், 500 nits ஒளிர்வுடன், கண்களுக்குப் பாதுகாப்பு தரும் விதத்தில், குறைந்த அழுத்தத்தைத் தருவதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் Gizmore நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் குமார் கலிரோனா, இந்த ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்து வைத்து, இதில் செயற்கை நுண்ணறிவு வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ப்ளூடூத் வசதிகளும் உள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், இதன் உலோகத்தாலான டயல், வாட்டர் ப்ரூப் வசதிகளை உள்ளடக்கியது என்று கூறப்பட்டது. மேலும், ஜிபிஎஸ் வசதி உள்ள இந்த வாட்ச்சில், ஏழு நாட்கள் வரை நிலைத்திருக்கும் பேட்டரி வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், யோகா, நீச்சல், ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, கூடைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து, சைக்கிளிங், ட்ரெக்கிங் போன்ற விளையாட்டுகளைக் கணக்கிடும் அம்சங்களும், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைக் கணக்கிடும் ஆரோக்கிய அம்சங்களும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ளன. ஏற்கனவே சந்தையில் இருக்கும் GIZFIT 910 ஸ்மார்ட் வாட்ச் இன் மேம்படுத்தப்பட்ட மாடலாக GIZFIT 910 PRO இருக்குமென்றும், ஏப்ரல் 27-ம் தேதி முதல் பிலிப்கார்ட் தளத்தில் இதை வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.