2021 ஆம் ஆண்டு, மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே, உலக சுகாதார மையம், உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு, உலக அளவில் 619000 மலேரியா மரணங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, 2020 ஆம் ஆண்டு 625,000 உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், உலகளவில் மலேரியா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. ஆனால் 2019 - 20ம் ஆண்டைக் காட்டிலும் 2020 - 21 ஆம் ஆண்டில் பாதிப்பு குறைவான வேகத்தில் இருந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் அறிக்கை படி, ஆப்பிரிக்கா கண்டம், மலேரியாவால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. உலக அளவில் 95% மலேரியா பாதிப்புகளும், 96% மலேரியா மரணங்களும் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ளன.