பசுமை வாயுக்களின் வெளியேற்றம் இந்த வருடம் உச்சபட்ச அளவை எட்டி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வருடாந்திர அடிப்படையில், இந்த ஆண்டு 54 பில்லியன் டன் அளவில் கார்பன் வெளியேற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நொடிக்கும் 1700 டன் கார்பன் வெளியேற்றப்படுகிறது. இதனால், காற்று மாசு எண்ணிப் பார்க்க முடிய முடியாத வகையில் அதிகரித்துள்ளது.
“புவி வெப்பமயமாதல், இதுவரை இல்லாத அளவு பதிவாகியுள்ளது. இதன் விளைவுகளை நாம் உணரத் தொடங்கியுள்ளோம். கடந்த 2013 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளில், வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. புவி வெப்பமயமாதல் விகிதம் 1.5 டிகிரி செல்சியஸ் வரை எட்டுவது அபாயகரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் அந்த அளவை எட்டவில்லை ஆயினும், மிகவும் வேகமாகவே அதை நோக்கி பயணித்து வருகிறோம்.” என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
“கடந்த 10 ஆண்டுகளில், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுக்கு இணையாக, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் உள்ளதால், முன்னெடுப்புகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை” இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.