இந்தியாவைச் சேர்ந்த கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு, இந்திய அரசின் அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
கோ பர்ஸ்ட் நிறுவனம், அரசாங்கத்திடம் இருந்து, 1500 கோடி ரூபாய் வரை அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற முடியும். அதன்படி, தற்போது வரை, 800 கோடி ரூபாய் பெறப்பட்டு விட்டது. இந்த 400 கோடி ரூபாய் மூலம், வரும் வாரங்களில் புதிதாக 16 P&W இன்ஜின்களை வாங்க கோ பர்ஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 144 விமானங்கள் பெறுவதற்கான திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்ஜின் பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெறும் 32 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அத்துடன், சமீப காலமாக, இந்த நிறுவனத்தின் விமானங்கள் காலதாமதமான பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் தான், அரசாங்கத்தின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.














