இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 57000 ரூபாயாக பதிவாகியுள்ளது. இது, ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு விலையுடன் ஒப்பிடுகையில், 800 ரூபாய் கூடுதலாகும். கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஆகஸ்ட் 2020 ல் அதிகபட்ச விலை உயர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வருட தீபாவளி பண்டிகை முதல் தற்போது வரை, தங்கத்தின் விலை 14% உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளை வாங்கும் போக்கு 25% குறைந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தங்க நகைகளின் விலை உயர்ந்து வருவதால், வைர நகைகளின் பக்கம் பொதுமக்களின் ஆர்வம் திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த, தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15% குறைக்க, வரும் பட்ஜெட்டில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று கருதப்படுகிறது.