சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது, விலை மீண்டும் உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ரூ.360 குறைந்திருந்த நிலையில், தற்போது ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,060-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் நிலையான நிலைமையின்மையே இந்த விலை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.