ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக கூடுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை சவரன் 55 ஆயிரத்தை கடந்தது. அதனைத் தொடர்ந்து மேலும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்தது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்த நிலையில் இன்று ரூபாய் 640 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் தற்போது 54 ஆயிரத்து 240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று கிராமுக்கு ரூபாய் 80 உயர்ந்து 6780 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் உயர்ந்து 98.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது