ஓபன் ஏஐ நிறுவனம் தயாரித்துள்ள சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு போட்டியாக, ‘பார்டு’ என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கி வந்தது. தற்போது, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில், ‘பார்டு’ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது. “பொதுமக்கள் இதனை பயன்படுத்துவதற்கு பதிவு செய்து, காத்திருப்பு பட்டியலில் சில காலம் இருக்க வேண்டும். விரைவில் அவர்களுக்கு பார்டு சேவை வழங்கப்படும்” என்று கூகுள் நிறுவனத்தின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டு தொழில்நுட்பத்தின் மூலம், கட்டுரை எழுதுவது, சில யோசனைகள் கேட்பது உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பெற முடியும். பார்டு வெளியாகி இருப்பது சாட் ஜிபிடிக்கு சவால் ஆனதாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இரு செயற்கை நுண்ணறிவு தளங்களிலும் மேம்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.