கூகுள் குரோம் அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு, கூகுள் குரோம் டெஸ்க்டாப் வெர்ஷனில் புதிய வெளியீடுகள் மற்றும் மேம்படுத்தங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
கடந்த 2008 செப்டம்பரில், கூகுள் குரோம் அறிமுகமானது. ஒவ்வொரு வருடமும் பல்வேறு புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டு, கூகுள் குரோம் மேம்படுத்தப்பட்டது. தற்போது, அதன் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிய தோற்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிக கவனம் பெற்றுள்ளது. இது தவிர, பயனர்கள், எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இணைய தேடலில் ஈடுபட, பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் கொடுக்கப்பட உள்ளன. வரும் வாரங்களில், இவை பயன்பாட்டுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐகான்கள், புதிய நிறங்கள் ஆகியவை கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தேடல் அம்சம் முக்கியமாக கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.