ரஷ்யா - தரவுகளை சேமிக்காததால் கூகுள் நிறுவனத்துக்கு 164000 டாலர்கள் அபராதம்

November 15, 2023

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்துக்கு 15 மில்லியன் ரூபிள்கள், அதாவது 164000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறது. தகவல் பரிமாற்றம், தகவல் கருத்து போன்ற பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, கூகுள் நிறுவனம், ரஷ்யா கூறிய சட்டவிரோத தகவல்களை நீக்காமல் விட்டதால், ரஷ்ய அரசின் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. மேலும், ரஷ்ய ஊடகங்களுக்கு யூடியூப் தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், கூகுள் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த […]

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்துக்கு 15 மில்லியன் ரூபிள்கள், அதாவது 164000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறது. தகவல் பரிமாற்றம், தகவல் கருத்து போன்ற பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, கூகுள் நிறுவனம், ரஷ்யா கூறிய சட்டவிரோத தகவல்களை நீக்காமல் விட்டதால், ரஷ்ய அரசின் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. மேலும், ரஷ்ய ஊடகங்களுக்கு யூடியூப் தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், கூகுள் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய பயனர்களின் தரவுகளை ரஷ்யாவுக்குள் உள்ள சர்வர்களில் சேமிக்காதது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 797

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu