கலிபோர்னியாவில், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக எபிக் கேம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 4 வாரங்கள் நடைபெற்ற தீவிர வழக்கு விசாரணையின் இறுதியில், எபிக் கேம்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
கூகுள் பிளே தளம், தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சர்வாதிகாரமாக செயல்பட்டதாக எபிக் கேம்ஸ் தெரிவித்தது. மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியை கூகுள் கட்டுப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஆண்ட்ராய்டு தளங்களில், கூகுள் நிறுவனத்தின் அதிகாரம் மேலும் ஓங்கி இருந்ததாக கூறப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையில், கூகுள் நிறுவனம் தனக்கு இருந்த அதிகாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. எபிக் நிறுவனத்தின் தலைவர் டீம் ஸ்வீனி, இந்த தகவல்களை தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.