கூகுள் நிறுவனத்தின் புதிய கைபேசி வகையறாவான பிக்சல் 8 நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.நேற்று, கூகுள் நிறுவனத்தின் ‘மேட் பை கூகுள்’ நிகழ்வு நடைபெற்றது. இதில், பல்வேறு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி, கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 கைபேசிகள் வெளியிடப்பட்டன. பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகிய மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அஸ்ட்ரோ போட்டோகிராபி அம்சத்துடன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களை இந்த கைபேசி உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 கைபேசி 699 டாலர்களுக்கும், பிக்சல் 8 ப்ரோ கைபேசி 999 டாலர்களுக்கும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.