விதிமுறைகளை மீறியதற்காக இந்தியாவில் பிளே ஸ்டோரில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட லோன் ஆப்ஸை கூகுள் நீக்கியுள்ளதாக அதன் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கூகுள் APAC (Asia Pacific Region) இன் டிரஸ்ட் மற்றும் சேஃப்டியின் மூத்த இயக்குனரும், தலைவருமான சாய்கத் மித்ரா இது குறித்து கூறுகையில், ஆன்லைனில் நடக்கும் மோசடியானது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்க நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு எனக் ௯றினார். கொள்கை மீறல், தகவல் இல்லாமை மற்றும் தவறான தகவல் வழங்குவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் ஆப்கள் ௯குள் பிளேஸ்டோரிலி௫ந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ௯குள் நிறுவனமானது கிட்டத்தட்ட 100,000 டெவலப்பர்களை உ௫வாக்கும் நோக்கில் செயல்படுகிறது . மேலும் இதற்காக பல நகரங்களில் சைபர் செக்யூரிட்டி விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்படுகிறது. அத்துடன் Google.org இலிருந்து 2 மில்லியன் டாலர்கள் நிதியானது டிஜிட்டல் பாதுகாப்பு சேவைக்காக சிவில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து முயற்சிகளும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் கூட்டுத் திறனை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டது என ௯குள் தெரிவித்துள்ளது.