சந்தை போட்டியில் தவறான நடைமுறைகளை பின்பற்றியதற்காக, கடந்த அக்டோபர் மாதத்தில் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தேசிய சந்தை போட்டி ஆணையம் (சிசிஐ) அபராதம் விதித்திருந்தது. அதனை உரிய நேரத்தில் கட்ட தவறியதால், கூகுள் நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த வாரம், கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் தனது ஆதிக்கத்தை தவறான முறையில் செலுத்தியதாக கூறப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், பொதுவாக, 30 நாட்களுக்குள் அபராதங்கள் செலுத்தவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்புவது ஒரு விதிமுறை. அதன்படியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சிசிஐ தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு 1337.76 கோடி மற்றும் 936.44 கோடி என்று இருமுறை சிசிஐ அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.