விரைவில் கூகுள் தேடுபொறியில் ஏஐ ஓவர்வியூஸ் அம்சத்தை வெளியிடுவதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தேடு பொறியில் செயற்கை நுண்ணறிவு அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் வரும் வாரத்தில் இருந்து அமெரிக்க பயனர்களுக்கு வெளியாவதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். விரைவில் பல்வேறு உலக நாடுகளில் உள்ள பயனர்களுக்கும் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும் என கூறியுள்ளார். கூகுள் தேடல் முடிவுகளின் மேல் பகுதியில் ஏஐ ஓவர்வியூஸ் என்ற பகுதி இடம்பெறும். அதில், பயனர் கேட்ட கேள்வி அல்லது தேடலுக்கு, செயற்கை நுண்ணறிவு மூலம் 1 அல்லது 2 பத்திகளில் விளக்கங்கள் வழங்கப்படும். அதன்படி, ஒரே பக்கத்தில் பயனருக்கு தேவையான விளக்கங்கள் கிடைத்துவிடும். இதனால், மூல இணையதள பக்கங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என அச்சம் எழுந்துள்ளது.