புற்று நோயை கண்டறியும் நவீன நுண்ணோக்கியை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் இணைந்து இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆக்குமெண்டெட் ரியாலிட்டி மைக்ரோஸ்கோப் ஒன்றை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நுண்ணோக்கி மருத்துவர்களால் கண்டறியப்பட இயலாத விஷயங்களை கூட கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது டயக்னோசிஸ் எனப்படும் நோயியல் நிபுணர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கருவி பல்வேறு பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மருத்துவ துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.