இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில், பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இதன்படி, நாளை முதல் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி வகுப்புகள் தொடங்கும். ஆனால், 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தினால் பள்ளி வேலை நாட்களில் தொடர்ந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, இந்த ஆண்டு (2025) கல்வி வேலை நாட்களுக்கான புதிய அட்டவணை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட அட்டவணை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், புத்த துறவி மடாலயங்களுக்கும் பொருந்தும். புதிய கல்வியாண்டு வருகிற 27-ம் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.